டெல்லி: கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை உலக நாடுகளில் இந்தியாவில் தான் அதிகம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஹர்ஷவர்தன் தெரிவித்து உள்ளார்.

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது.  தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2வது இடத்திலும் உள்ளது. 3வது இடத்தை இந்தியா பிடித் துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 25,30,490ஆக உயர்ந் துள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து,  18,09,702 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதே வேளையில் உயிரிழந்துள்ளோர் எண்ணிக்கை  49,170 ஆக உள்ளது.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது

130 கோடி மக்கள் தொகையுடன், அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் 2வது இடத்தில் உள்ள இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.  கொரோனா பாதித்தோர் பட்டி யலில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது நாடாக இந்தியா உள்ளது.

கொரோனா  தொற்று தாக்கத்தின் முதல் பாதிப்பை இந்தியாவில் உறுதிசெய்தபோது,  நமது நாட்டில், ஒரே ஒரு கொரோனா பரிசோதனை மையம் மட்டுமே இருந்தது. ஆனால்,  1,400 க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

நமது நாட்டில்,  கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது., இதன் விகிதம் மற்ற உலகநாடுகளை விட இந்தியாவில் தான் அதிகம் எனவும், உயிரிழப்பு விகிதம் மிகக் குறைவு என்றார்.

மேலும்,  காசநோயை அகற்ற, உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த இலக்கை விட 5 ஆண்டுகளுக்கு முன்னதாகவே (அதாவது 2025- ம் ஆண்டிற்குள்) எட்டிவிடும் என நம்பிக்கை தெரிவித்தவர்,  2022 இறுதிக்குள், ஆயுஷ்மான் பாரத் பி.எம்.ஜே.ஏ திட்டத்தின் கீழ், 1,50,000 ஆரோக்கிய மையங்களை மத்திய அரசு அமைக்கவுள்ளதாகவும்  தெரிவித்தார்.