ராஞ்சி

ந்திய ஆஸ்திரேலியா மூன்றாம் ஒரு நாள் பந்தயத்தில் ராணுவ தொப்பியுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

ராஞ்சியில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியினர் இடையே மூன்றாவது ஒரு நாள் பந்தயம் நடந்து வருகிறது.    இந்த போட்டியின் போது நீல நிற சீருடையுடன் இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தலையில் அணிந்துக் கொள்ள ராணுவத்தினர் பயன் படுத்தும் தொப்பி அளிக்கப்பட்டுள்ளது.  புல்வாமா தாக்குதலில் மரணம் அடைந்த வீரர்களின் நினைவாக இந்த தொப்பிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ராணுவ தொப்பிக்களை இந்திய வீரர்களுக்கு தோனி வழங்கி உள்ளார்.   அதை அணிந்து தற்போது இந்திய வீரர்கள் விளையாடி வருகின்றனர்.   இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.