புதுடெல்லி: செஸ் நட்சத்திரம் பிரக்னானந்தா, சீன போட்டியாளரைத் தோற்கடித்து, ஃபைட்(FIDE) ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் ‘பூல் ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளார்.

தான் விளையாடிய ஒன்பதாவது மற்றும் இறுதிச் சுற்றில், சீன வீரரை 4-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார் பிரக்னானந்தா.

இந்த வெற்றியின் மூலம் ‘பூல் ஏ’ பிரிவில் 17 புள்ளிகளைப் பெற்று இந்தியா முதலிடம் பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது இந்தியா. ஆகஸ்ட் 28ம் தேதி காலிறுதி சுற்று நடைபெறவுள்ளது.

போட்டியில் சிறப்பாக செயல்பட்ட காரணத்திற்காக, 15 வயது பிரக்னானந்தாவிற்கு சர்வதேச செஸ் பெடரேஷன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.