இந்தூர்: இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றிபெறும் என்ற நிலையில் இருக்கிறது.

முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் வெறும் 150 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பின்னர், தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்தியா 493 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.

பின்னர், 343 ரன்கள் பின்தங்கிய வங்கதேச அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. அந்த அணி 50 ரன்களை அடிப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. தற்போது மொத்தமாக 6 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை அடித்துள்ளது.

ஆறுதல் அளிக்கும் விஷயமாக, அந்த அணியின் ரஹீம் அரை சதம் அடித்துள்ளார். இந்திய அணியின் ஃபீல்டிங்கும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. பல கேட்ச்களை தவறவிட்டார்கள் அவர்கள்.

வங்கதேசத்தின் கையில் 4 விக்கெட்டுகளே மீதமுள்ள நிலையில், இன்னும் 150 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய நிலையில், 2 நாட்களுக்கும் மேல் ஆட்டம் பாக்கியிருப்பதால், அந்த அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தழுவும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.