அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், மிகவும் எச்சரிக்கையுடன் ஆடிவருகிறது இந்தியா. 10 ஓவர்கள் கடந்துள்ள நிலையில் 14 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது இந்திய அணி.

இங்கிலாந்து அணி, தனது முதல் இன்னிங்ஸில் 112 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், தனது இன்னிங்ஸை துவக்கியுள்ளது இந்திய அணி.

ஆனால், முதல் நாளில் எந்தவித விக்கெட்டையும் இழந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் ஆடி வருகிறது இந்திய அணி. அதிலும் ஷப்மன் கில்லின் ஆட்டம் மிகவும் நிதானமானது. இதுவரை 27 பந்துகளை சந்தித்துள்ள அவர் 1 பவுண்டரி மட்டுமே அடித்துள்ளார்.

28 பந்துகளை சந்தித்த ரோகித் ஷர்மா, 10 ரன்களை அடித்துள்ளார். இங்கிலாந்து அணி பந்துவீச அதிகநேரம் எடுத்துக்கொள்கிறது.