காத்மண்டு: தெற்காசிய கால்பந்து 18 வயதினருக்கான சாம்பியன்ஷிப் தொடரில், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

மொத்தம் 6 அணிகள் மட்டுமே இடம்பெறும் இந்த கால்பந்து தொடரில், தலா இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுடன் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

வங்கதேச அணியுடனான முதல் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் இலங்கை அணியுடன் இரண்டாவது போட்டியில் மோதியது இந்தியா. இப்போட்டியில், இந்தியாவின் குர்கிரத் சிங் 2 கோல்களும், அமன் செத்ரி 1 கோலும் அடிக்க, 3 – 0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.

இதன்மூலம் மொத்தம் 4 புள்ளிகள் பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. அரையிறுதிப்போட்டி 27ம் தேதி நடைபெறுகிறது. இப்போட்டியில் மாலத்தீவை சந்திக்கிறது இந்தியா.