புனே: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை விளாசியுள்ளது.

இந்தியா சார்பில், 1 சதம் மற்றும் 2 அரைசதங்கள் அடிக்கப்பட்டன. ரிஷப் பன்ட் பிரமாதமாக ஆடி, 40 பந்துகளில் 7 சிக்ஸர்கள் & 3 பவுண்டரிகளுடன் 77 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்ட்யா 16 பந்துகளில் 4 சிக்ஸர்கள் & 1 பவுண்டரியுடன் 35 ரன்களை எடுத்து அவுட்டானார்.

இந்த இருவரின் அதிரடிதான், இந்திய அணியின் எண்ணிக்கை இறுதி கட்டத்தில், வேகமாக உயர்வதற்கு வழிகோலியது. கோலி 66 ரன்னிலும், ராகுல் 108 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து தரப்பில், டாம் கர்ரன், 10 ஓவர்கள் வீசி அதிகபட்சமாக 83 ரன்களை விட்டுக்கொடுத்தார். கடைசி கட்டத்தில், டாப்ளே திறமையாக வீசி ரன்களைக் கட்டுப்படுத்தினார்.