புதுடெல்லி:

பாகிஸ்தானில் இந்திய விமானப் படை நடத்திய தாக்குலுக்கான ஆதாரத்தை இந்தியா வெளியிடவேண்டும் என்று காங்கிஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.


செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், எல்லை தாண்டி அல்கொய்தா தலைவர் பின்லேடனை கொன்ற அமெரிக்கா, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டது.

அதுபோல், பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி தீவிரவாத முகாம்களை அழித்த  இந்திய விமானப்படை  ஆதாரங்களை இந்தியா வெளியிட வேண்டும்.

விமானப் படை தாக்குதல் நடத்தியது குறித்து நான் கேள்வி எழுப்பவில்லை. இன்றைய தொழில்நுட்ப உலகில், சாட்டிலைட் படத்தை தேடிப் பார்க்கும் வசதியும் உள்ளது.

பின்லேடனை அழித்தபின் அதற்கான ஆதாரத்தை அமெரிக்கா காட்டியது போல், இந்தியாவும் செய்ய வெளியிடவேண்டும் என்றார்.