ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் தொடரில், அசத்தலாக ஆடி அரையிறுதி சுற்றில் நுழைந்துள்ளார் இந்திய வீரர் ஸ்ரீகாந்த்.

இந்தத் தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேறுசில இந்திய வீரர்-வீராங்கணைகள் சோபிக்காமல் ஏமாற்றினர். இந்நிலையில், ஸ்ரீகாந்த் மட்டும் ஒற்றை நட்சத்திரமாக ஜொலித்து, அரையிறுதிக்கு முன்னேறினார்.

இவர், காலிறுதிப் போட்டியில் சீனாவின் சென் லாங்கை எதிர்கொண்டார். இவர் முதல் செட்டை பிரமாதமாக ஆடி 21-13 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

அடுத்த செட்டிலும் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது செட் துவங்குவதற்கு முன்னரே, காயம் காரணமாக சீன வீரர் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால், எளிதாக வெற்றியை சுவைத்த அவர், அரையிறுதிக்குள் நுழைந்தார்.