புதுடெல்லி: கொரோனா பரவலின் இரண்டாவது அலையை தடுப்பதில், இந்தியா வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது என்றுள்ளது இந்திய ரிசர்வ வங்கி.

இந்த 2021ம் ஆண்டின் ஜனவரி மாத புல்லட்டினை வெளியிட்டது ரிசர்வ் வங்கி. இதில்தான், கொரோனாவின் இரண்டாவது அலையை, இந்தியா வெற்றிகரமாக மட்டுப்படுத்தியுள்ளது மற்றும் வென்றுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, நிர்ணயிக்கப்பட்ட மதிப்பீடுகளைவிட, இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை சிறப்பாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உலகிலேயே, மிகப்பெரிய அளவிலான கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடைமுறை இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயல்பாடு வெற்றிகரமாக முடிவடைந்தால், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் யுத்தம் இன்னும் செம்மையடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.