புவனேஸ்வர்: முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட பினாகா ஏவுகணை ஒடிசா மாநிலத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

ஒடிசா மாநிலத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையினால் இந்த ஏவுகணை உருவாக்கப்பட்டு உள்ளது.  முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை ஒடிசாவில் நடத்தப்பட்டது.

கடற்கரையின் சண்டிப்பூரின் ஏவுதளத்திலிருந்து மொத்தம் 6 ராக்கெட் ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் அனைத்து ராக்கெட் ஏவுகணைகளும் வெற்றிகரமாக குறிப்பிட்ட இலக்கை தாக்கி அழித்தன.

ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதையடுத்து, ராணுவத்தில் ஏவுகணையை சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.