சிட்னி:

க​ளிர் டி20 உ​ல​கக் கோப்பை கிரிக்கெட் போட்டி​யின் அரைஇறுதிப்போட்டி இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில், மழையின் காரணமாக ஆட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் நடை​பெற்று வரும் 7-ஆவது மக​ளிர் டி20 உ​ல​கக் கோப்பை போட்டி தற்​போது அரை​யி​று​திக் கட்டத்தை எட்டி​யுள்​ளது. இந்​தி​யா-​இங்​க​லாந்து அணி​க​ளும், மற்​றொரு அரை​யி​று​தி​யில் நடப்பு சாம்​பி​யன் ஆஸி.-​தென்​னாப்​பி​ரிக்க அணி​க​ளும் மோது​கின்​றன.

முன்னாள் உலக சாம்பியனான இங்கிலாந்து அணியை எதிர்த்து இன்று போட்டி நடைபெறுவதாக இருந்தது.  சிட்னியில் காலை 9.30 மணி அளவில் இந்தியா இங்கிலாந்து இடையே  போட்டி நடைபெறுவதாக இருந்தது. இதில் வெற்றிபெறும் அணி, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் சூழல் இருந்தது. ஆனால் மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய அணி 8 பாயிண்டுகளை வைத்துள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து அணி 6 பாயிண்டுகளை மட்டுமே வைத்துள்ளது.

இன்று பிற்பகல் போட்டி,  சவுத்ஆப்ரிகா, ஆஸ்திரேலியா அணிகள் இடையோ நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும்அணியுடன் இந்திய அணி இறுதிப்போட்டியில் விளையாடும்.

இந்த போட்டியில் குரூப் ஏ பி​ரி​வில் 4 ஆட்டங்​க​ளி​லும் வெற்றி கண்டு முத​லி​டத்​து​டன் அரை​யி​று​திக்கு தகுதி பெற்​றது, தற்போது, இறுதிப்போட்டிக்குள் நுழைந்​துள்​ளது..

டி20 உ​ல​கக் கோப்​பை​ போட்டிகளில்  கடந்த 2018 டி20 உ​ல​கக் கோப்பை போட்டி அரை​யி​று​தி​யில் இங்​கி​லாந்​து​டன் 8 விக்கெட் வித்​தி​யா​சத்​தில் தோல்வி கண்டு வெளி​யே​றி​யது இந்​தியா. இந்த தடவை முதன்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதன் காரணமாக இந்தியா அணி கோப்பை பெறும் வாய்ப்பும் பிரகாசமாகி உள்ளது.

இந்​திய அணி​யில் இளம் தொடக்க வீராங்​கனை ஷபாலி வர்மாவின் அதிரடி ஆட்டம் மற்றும்,   நட்சத்​திர வீராங்​க​னை​க​ளான ஸ்மி​ருதி, ஹர்​மன்ப்​ரீத், ஜெமிமா, தனியா, வேதா கிருஷ்​ண​மூர்த்தி ஆகி​யோர்  உள்ள நிலையில், இந்த ஆண்டு,மக​ளிர் டி20 உ​ல​கக் கோப்பையை இந்திய அணி பெறும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.