டில்லி,

40 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணையை இந்தியா  இறக்குமதி செய்கிறது.

கடந்த பேச்சு வார்த்தைடியின்போது  டிரம்ப் –  மோடிக்கு இடையே ஏற்பட்ட ஒப்ந்தம் காரணமாக கச்சா எண்ணை அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது.

இதன் முதல்கட்டமாக அமெரிக்காவில் இருந்த கிளம்பிய எண்ணை கப்பல்கள் வரும் திங்கட்கிழமை இந்தியா வந்தடைகிறது அதில்  2 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணை வருகிறது.

இந்தியா-அமெரிக்கா இடையே எண்ணெய் ஏற்றுமதி செய்ய கடந்த 40 ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை,  கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி ஒபாமா சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டு தடை விலக்கி கொள்ளப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி தற்போதைய அதிபரான டெனால்ட் டிரம்ப்பை சந்தித்து எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டார். இதில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யவதற்கான ஒப்பந்தம் உறுதியானது.

இதன் முதற்கட்டமாக 2 மில்லியன் பீப்பாய்கள் கொண்ட அமெரி்க்காவின் கச்சா எண்ணெய் கப்பல், டெக்சாஸ் நகரில் இருந்து கிளம்பியது. இந்த கப்பல் வரும் வரும் திங்கட்கிழமை ஒடிசா துறைமுகம் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.