டெல்லி: வரும் 8ம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமான சேவையை துவக்க உள்ளதாக மத்திய விமான போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.

பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், பல்வேறு நாடுகளுக்கும் பரவி இருக்கிறது. இதையடுத்து, பிரிட்டனுக்கான விமான சேவைக்கு தடை விதித்து, கடந்த டிசம்பர் 23ம் தேதி, மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்பிறகு இந்த தடை உத்தரவு வரும் 7ம் தேதி வரை நீட்டித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருந்தார். இந் நிலையில் பிரிட்டனுக்கு வரும் 8ம் தேதி முதல் விமான சேவை துவங்குவதாக அவர் கூறி உள்ளார்.

வரும் 23ம் தேதி வரை விமானங்கள் இயங்கும் என்றும், அதில் 15 விமானங்கள் மட்டுமே டெல்லி, மும்பை,பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களிலிருந்து சேவையை துவக்கும் என்றும் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.