டில்லி

ன்று ஒரே நாளில் 227 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1401 ஆகி உள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் 200 நாடுகளில் பரவி உள்ளது.  இந்த வரைச் தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.  இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

ஆயினும் நாட்டில் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது.  இன்று மட்டும் 227 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.  இதன் மூலம் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1041 ஆகி உள்ளது    சுமார் 102 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 46 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் இன்று 72 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.   நாட்டில் அதிக அளவில் பாதிப்பு உள்ள இம்மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 302 ஆகி  உள்ளது.

ஆந்திராவில் இன்று 17 புதிய நோயாளிகள் கண்டறியபட்டுள்ளன்ர்.   இந்த 17 பேரில் 9 பேர் நிஜாமுதின் இஸ்லாமிய நிகழ்வில் கலந்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.

கொரோனாவால் மேற்கு வங்க மாநிலத்தில் மேலும் ஒருவர் மரணம் அடைந்ததால் மொத்தம் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 3 ஆகி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மரணம் அடைந்ததால் கேரளாவில் இதுவரை 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.