புதுதில்லி:
த்திய அரசு இன்று முதல்  இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து உள்ளது.  ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது.
இதை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கத்தில், நாடு முழுவதும் தேசிய நினைவுச் சின்னங்களிலும், சுற்றுலா தலங்களிலும் இன்று முதல் பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதுகுறித்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா நேற்று கூறியதாவது: –
plastic
தேசிய நினைவுச்சின்னங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பாலித்தீன் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது.  நுழைவாயிலில் உள்ள காவலாளிகள், சுற்றுலா பயணிகளிடம் பாலித்தீன் பைகள் உள்ளதா என்று பரிசோதித்து அனுப்புவார்கள்.
இந்த தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பது பற்றி ஒரு மாதத்துக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.