இந்திய கிரிக்கெட் “யு19″அணியின் பயிற்சியாளர் ராஜேஷ் சவந்த் மர்மான முறையில் மரணமடைதுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர், ராஜேஷ் சவந்த் . வயது 40.  இவர் இன்று காலையில் பயிற்சிக்கு வரவில்லை. இதையடுத்து நிர்வாகிகள் ராஜேஷ் சவந்தை அழைத்து வர அவர் தங்கியிருந்த விடுதியின் அறைக்குச் சென்றனர்.
வெகுநேரமாக கதவைத் தட்டியும் திறக்கப்படாததால்,  சந்தேகமடைந்த நிர்வாகிகள் பூட்டை உடைத்து பார்த்தனர். அறையுனுள்ளே உயிரிழந்த நிலையில் ராஜேஷ் சவந்த் கிடந்ததார்.

சம்பவ இடத்திற்கு வந்த மும்பை காவல்துறையினர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனக்காக அனுப்பி வைத்தனர்.  பிரேத பரிசோதனை பின்னரே ராஜேஷ் சவந்த உயிரிழந்தற்கான உண்ணை காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.