புதுடெல்லி:

உலகளாவிய தீவிரவாத இயக்கங்களான ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்-கொய்தா இயக்கங்கள் இந்தியாவில் காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் செயல்பாடுகள் இந்தியாவில் விரல் விட்டு எண்ணக் கூடியதாக இருந்தது.

எனினும் தற்போது இந்தியாவில் தங்கள் நடவடிக்கையை தீவிரப்படுத்த ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் முடிவு செய்துள்ளது.

இலங்கையில் ஈஸ்டர் அன்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து, தங்கள் நடவடிக்கையை தெற்காசியாவிலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தீவிரப்படுத்த முயற்சித்து வருகிறது.

விலியத் அல் ஹிந்த் எனப்படும் ஐஎஸ்ஐஎஸ் இந்திய மாகாணத்தின் புதிய தலைவராக அபு முகமது அல் பெங்காளி நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் தொடர்பான குற்றங்களை இந்த அமைப்பு இந்தியாவிலும் பங்களாதேஷிலும் நிகழ்த்தப் போவதையே இந்த நடவடிக்கை காட்டுகிறது என்ற கருத்து மேலோங்கியுள்ளது.