நாக்பூர்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. சென்னை, கொல்கத்தா, இந்தூரில் நடந்த முதல் 3 போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. பெங்களூருவில் நடந்த 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிரா நாக்பூரில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவரின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணி 42.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 243 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோகித் சர்மா 125 ரன்(109) விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார். கேப்டன் கோலி 39 ரன் எடுத்தார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 4:1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.