கான்பெரா: இன்றையப் போட்டியில், முதன்முறையாக டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்து களமிறங்கியுள்ளது. தற்போதைய நிலையில், 7 ஓவர்களில் 35 ரன்கள் மட்டுமே எடுத்து 1 விக்கெட்டை இழந்துள்ளது இந்திய அணி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை ஏற்கனவே இழந்துவிட்டது இந்திய அணி. இந்நிலையில், மூன்றாவது போட்டியிலாவது வெற்றிபெற வேண்டும் என்ற நிலை.

இதனையடுத்து, கான்பெராவில் நடைபெறும் இன்றையப் போட்டியில், கடந்த 2 போட்டிகளில் டாஸ் தோற்ற கோலி, இன்று முதன்முறையாக டாஸ் வென்றார். இதனையடுத்து, பேட்டிங் தேர்வு செய்தார்.

இன்றையப் போட்டியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக ஷப்னம் கில் களமிறங்கியுள்ளார். ஷிகர் தவான் 27 பந்துகளில் 16 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டானார். தற்போது கோலியும், கில்லும் களத்தில் உள்ளனர்.

மேலும், இன்றையப் போட்டியில் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், முகமது ஷமி மற்றும் சாஹல் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக குல்தீப் யாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் இடம்பெற்றுள்ளனர்.