சென்னை: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸில், விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறி வருகிறார்கள் இந்திய பந்துவீச்சாளர்கள்.

உணவு இடைவேளையின்போது 67 ரன்களுக்கு 2 விக்க‍ெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி, அதன்பிறகு நிலைத்துநின்று ஆடி வருகிறது. தற்போது, இரண்டாவது செஷன் நடைபெற்றுவரும் நிலையில், டாம் சிப்லி அரைசதம்(51) அடித்து ஆடி வருகிறார். ஆனால், அவர் மிகவும் நிதானமாக ஆடிவருகிறார். இதுவரை 168 பந்துகளை சந்தித்துள்ளார் அவர்.

மற்றொருபுறம், கேப்டன் ஜோ ரூட், 88 பந்துகளை சந்தித்து 35 ரன்களை எடுத்துள்ளார். தற்போதைய நிலையில், 2 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களை எடுத்து ஆடி வருகிறது இங்கிலாந்து.

இந்தியா சார்பில், பும்ரா, அஸ்வின், இஷாந்த், நதீம் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பந்துவீசி வருகின்றனர்.