ராமேஸ்வரம்:

ராமேஸ்வரம் அருகில் இந்திய மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம் போல இன்று இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது அந்த படகுகளை நோக்கி இந்திய கடற்படை விரைந்து வந்தது. இந்திய மீனவர்கள் மீது ரப்பர் குண்டுகளால் சுட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்திய மீனவர்களின் படகுகிள் விரைந்து கிளம்பின.

அதில் ஒரு படகை சுற்றி வளைத்த இந்திய கடலோர காவல்படை, பிடித்துவைத்து, அதில் இருந்த மீனவர்களை முட்டி போடுமாறும் ஒற்றைக்காலில் நிற்குமாறும் தண்டனைகள் கொடுத்து வருவதாகவும்,

அந்த மீனவர்களும் ரப்பர் குண்டுகளால் காயம்பட்டு ரத்தம் வழிய நிற்பதாகவும் மீனவர் குருசாமி என்பவர் வேதனையுடன் தெரிவித்தார்.