பெய்ஜிங்: சீன ஓபன் பேட்மின்டன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் புதிய வரலாறு படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய ஜோடி, அரையிறுதியில் எதிர்பாராத தோல்வியைத் தழுவினர்.

இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சாத்விக்சாய்ராஜ் – சிராக் ஷெட்டி ஆகியோர் உலகத் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர்.
இவர்கள் காலிறுதிப் போட்டியில் வென்றவுடன், கோப்பை வெல்வார்கள் என்ற நம்பிக்கை அதிகரித்தது.

அரையிறுதியில், உலகின் நம்பர் ஒன் ஆண்கள் இணையான இந்தோனேஷியாவின் மார்கஸ் – கெவின் ஜோடியை எதிர்கொண்டனர்.

போட்டி மிகவும் கடினமாக இருந்தது. முதல் செட்டை 16-21 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 20-22 என்ற கணக்கிலும் இழந்ததால், மூன்றாவது சுற்றுக்கு செல்லாமலேயே ஆட்டம் முடிவடைந்தது.

தோற்றாலும், சிறப்பாகவும், தன்னம்பிக்கையுடன் செயல்பட்ட இந்திய இளைஞர்களுக்கு பலதரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிகின்றன.