டெல்லி: பிரபல யோகா பாபா ராம்தேவ் கூறும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து சுகாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கொரோனா வைரசை தடுக்க உதவும் ஒரு ஆயுர்வேத தீர்வை கண்டுபிடித்ததாக கூறிய பிரபல யோகா குரு மற்றும் தொழில்முனைவோர் பாபா ராம்தேவ் ஆகியோரின் கூற்றுக்களை இந்திய சுகாதார வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பாபா ராம்தேவ் இது தொடர்பாக ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில், நாங்கள் அறிவியல் ஆராய்ச்சி வழியாக அஸ்வகந்தா, கொரோனாவை உடலில் சேரவிடாமல் இருப்பதை கண்டுபிடித்தோம் என்று கூறியிருக்கிறார்.

அதற்கான ஆதாரங்களை அவர் அந்த வீடியோவில் காட்டவில்லை. மேலும், அவர் அதனை சர்வதேச அறிவியல் பத்திரிகைக்கு அனுப்பியதாகவும் ஆனால் எந்த பத்திரிகை என்றும் அவர் கூற மறுத்துள்ளார்.

COVID-19 க்கு சிகிச்சையளிக்க அல்லது தடுக்க தற்போது எந்தவொரு தடுப்பூசிகளும் மருந்துகளும் இல்லை, விசாரணை COVID-19 தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் மட்டுமே வளர்ச்சியில் உள்ளன.

இந்த வகையான செய்திகள் தவறானவை. நன்கு படித்தவர்களும் இதனால் தவறாக வழிநடத்தப்படுவார்கள் என்று இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் தொற்றுநோயியல் பேராசிரியர் டாக்டர் கிரிதர் பாபு கூறினார். இது போன்ற விளம்பரங்களை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நோய் எதிர்ப்பு சக்தி அபாயத்தை பற்றி குழப்பமான ட்வீட் கூட மக்களை குழப்புகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். தொடர்ச்சியான ட்வீட்டுகளில், #YogaForCorona என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க யோகாவை மேற்கொள்ளுமாறு இந்தியர்களை ராம்தேவ் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து கருத்து கூறியுள்ள ஆயுஷ் அமைச்சகத்தின் ஆலோசகர் நேசரி, கொரோனா வைரஸ் ஒரு புதிய வைரஸ், எனவே வெளிப்படையாக இதை குணப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை. புகார்கள் வந்தால் அதை பற்றி ஆராய்வோம். இப்போது என்னால் கருத்து தெரிவிக்க முடியாது என்றார்.

[youtube https://www.youtube.com/watch?v=v67OkBU6IpU?feature=youtu]