பெங்களூரு:

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஜி.எஸ்.எல்.வி. மார்க் -3 ராக்கெட் தயாரிப்பு திட்டத்தில் இது ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஜி.எஸ்.எல்.வி -3 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.