புனே : இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம், டோர் டெலிவரி மூலம், டீசலை வீட்டிற்கே  வந்து அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இந்தியாவின் முன்னணி பெட்ரோலிய நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம், புதுமையான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி வீட்டிற்கே வந்து டீசலை டெலிவரி செய்யப்படும்.  இதற்காக, டீசல் டேங்கர் லாரியில், டிஸ்பென்சர் பொருத்தப்பட்டுள்ள வாகனத்தை, இந்தியன் ஆயில் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.

முதற்கட்டமாக, மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இந்த சேவை துவங்குகிறது.  விரைவில் மற்ற பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

 

இந்த டோர் டெலிவரி சேவையில், டீசல் மட்டுமே அளிக்கப்படும். இதன் மூலம், பஸ், டிரக் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களுக்கு  நேரம் மற்றும் பணம் மிச்சப்படும் என்று ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.