டில்லி,

ந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடர் டில்லியில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளார்.

இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி தலைநகர் டில்லியில் நடைபெற்று வருகிறது.  நேற்று நடைபெற்ற  முதல் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான இந்தியாவின் சாய்னா நேவால் 10-21, 13-21 என்ற நேர் செட்டில் அமெரிக்காவைச் சேர்ந்த  பீவென் ஜாங்கிடம் தோல்வி அடைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில்,  இந்தியாவின் தற்போதைய  சாம்பியன் பி.வி.சிந்து , ஸ்பெயினை சேர்ந்த பீட்ரிஸ் கோரலெஸ்சுடனை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் யார் அரையிறுதிக்கு வருவார் என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

சுமார்  54 நிமிடங்கள் நடைபெற்ற  பரபரப்பான  ஆட்டத்தில், பி.வி.சிந்து 21-12, 19-21, 21-11 என்ற செட் கணக்கில் பீட்ரிசை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.

அதைத்தொடர்ந்து,  அரை இறுதிப்போட்டியில்,  தாய்லாந்தைச் சேர்ந்த முன்னாள் உலக சாம்பியன் ராட்சனோக் இன்டானோனை எதிர்கொள்கிறார். இந்த போட்டி சிந்துவுக்கு சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.