நாக்பூர்:

ந்திய கிரிக்கெட் வீரரான, ரோகித்சர்மாவின் அதிரடி சாதனைகள் தொடர்ந்து வருகிறது.கிரிக்கெட் வீரர்களின்  முந்தைய சாதனைகளை முறியடித்து, தொடர்ந்து பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரராகி வருகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா.

தற்போது, சர்வதேச முதல்தர கிரிக்கெட்டில் 400சிக்சர்கள் அடித்தால் மேலும் ஒரு சாதனையை படைக்க தயாராகி வருகிறார். ஏற்கனவே 398 சிக்சர்கள் அடித்துள்ள நிலையில், மேலும் 2 சிக்சர்கள் அடித்தால், 400சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த இந்தியாவின் முதல் வீரர் என்ற சாதனைக்கு ரோகித் சர்மா சொந்தமாகி விடுவார்.

ஏற்கனவே சமீபத்தில் பங்களாதேசத்துக்கு எதிரான டி20 ஆட்டத்தின்போது, டி 20 போட்டிகளில் 2500 ரன்களை கடந்து, உலகின்  முதல் கிரிக்கெட் வீரர்  என்ற சாதனையை ரோகித் சர்மா பெற்ற நிலையில், 400 சிக்சர்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் விரைவில் பெறுவார் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

இவர், டெஸ்ட் ஆட்டத்தில் 51 சிக்ஸ்களும், ஒருநாள் ஆட்டத்தில் 232 சிக்ஸ் விளாசி உள்ள நிலையில், டி20 ஆட்டத்திலும் இதுவரை 115 சிக்ஸ் அடித்து 398 சிக்சர்களை எடுத்திருந்த நிலையில்,  இன்னும் 2 சிக்சர்களை எப்போது விளாசப்போகிறார் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

ஏற்கனவே பாகிஸ்தானின் முன்னாள் பேட்ஸ்மேன் ஷாஹித் அப்ரிடி (476 சிக்ஸர்), மேற்கிந்திய தீவுகள் சர்வதேச கிறிஸ் கெய்ல் (534 சிக்ஸர்) மட்டுமே 400 சிக்சர்களை கடித்து சாதனை படைத்துள்ள நிலையில், அடுத்ததாக இந்திய வீரர் ரோகித் சர்மா விரைவில் சேர உள்ளார்.