சிட்னி: இந்திய அணியினருக்கான கொரோனா பரிசோதனையில், நெகடிவ் முடிவு வந்ததையடுத்து, அனைவருமே மைதானத்தில் பயிற்சியில் பங்கேற்றனர்.

ஆஸ்திரேலியாவில் நீண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடச் சென்றுள்ளனர் இந்திய அணியினர். துபாயிலிருந்து நேராக சிட்னி சென்றடைந்த அவர்கள், ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இந்நிலையில், இந்திய வீரர்கள் அனைவருக்குமே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதன்முடிவில், எல்லோருக்கும் நெகடிவ் ரிசல்ட் வந்ததையடுத்து, அனைவரும் ஹோட்டலுக்கு அருகேயுள்ள மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்.

இம்மாதம் 27ம் தேதி, இரு அணிகளுக்குமிடையே ஒருநாள் தொடர் தொடங்குகிறது. அதனையடுத்து டி-20 மற்றும் டெஸ்ட் தொடர்கள் துவங்குகின்றன.

உமேஷ் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், சத்தேஸ்வர் புஜாரா, தீபக் சாஹர், டி நடராஜன், ஷர்துல் தாக்கூர், ஹர்திக் பாண்டியா, பிரித்வி ஷா, குல்தீப் யாதவ், ஹனுமா விஹாரி, முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் பலரும் பயிற்சியில் ஈடுபட்டனர்.