டில்லி

ஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி செய்து விட்டு தப்பி ஓடிய நிரவ் மோடி எங்கிருக்கிறார் என தெரியவில்லை என்று இந்தியக் காவல்துறை தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ள நிரவ் மோடி குடும்பத்துடன் வெளிநாடு தப்பிச் சென்று விட்டார்.  அவரை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என இந்தியக் காவல்துறைக்கு வங்கி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.   அதை ஒட்டி அவரை திரும்ப இந்தியாவுக்கு அழைக்க சிபிஐ முயன்று வருகிறது.

இந்நிலையில் சிபிஐ மற்றும் இந்தியக் காவல் துறை ஆகிய இரண்டு துறையினரும் நிரவ் மோடி எங்கிருக்கிறார் என கண்டுபிடிக்க முடியவில்லை என அறிவித்துள்ளன.   சிபிஐ ஏற்கனவே நிரவ் மோடி கடந்த ஜனவரி மாதம் நாட்டை விட்டு சென்றுவிட்டதாக அறிவித்தது தெரிந்ததே.

நிரவ் மோடி இன்று தாம் எதுவும் தவறிழைக்கவில்லை என சிபிஐக்கு ஈ மெயில் ஒன்றை அனுப்பி உள்ளார்.