புதுடெல்லி:

நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது.

 

இந்தியன் ரயில்வே வெளியிட்ட அண்மை அறிவிப்பின்படி, நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

எக்ஸ்பிரஸ், மெயில், பயணிகள் ரயில் மற்றும் புறநகர் ரயில்கள் என அனைத்துவிதமான ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

எனவே, ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி வரையிலான அனைத்து ரயில் டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுகின்றன. முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுகள் அனைத்திற்குமான கட்டணங்கள் திருப்பி வழங்கப்படும் எனவும் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

கால அட்டவணைப்படி இயங்கும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. மார்ச் மாதம் முதல் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக நாட்டில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.

இந்த பொது முடக்கத்தின் கீழ் பொது போக்குவரத்துகள் ரத்து செய்யப்பட்டபோது, ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.