பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் ஸ்கோர் 300ஐ தாண்டிய நிலையில், சிறப்பாக ஆடிவந்த ஷர்துல் ஆட்டமிழந்துள்ளார்.

இந்திய அணி குறைந்த ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், வாஷிங்டன் சுந்தரும், ஷர்துல் தாகுரும் தாக்குப்பிடித்து, பிரமாதமாக ஆடி, இந்திய அணியின் ஸ்கோரை 300 ரன்களைத் தாண்டச் செய்தனர்.

இந்திய அணியின் எண்ணிக்கை 309 என்பதாக இருந்த நிலையில், 67 ரன்கள் அடித்திருந்த ஷர்துல், பேட் கம்மின்ஸ் பந்தில் பெளல்டானார். சுந்தர் 54 ரன்ளுடன் களத்தில் உள்ளார். தற்போது, சுந்தருக்கு ஜோடியாக நவ்தீப் சைனி களமிறங்கியுள்ளார்.

சுந்தர் மற்றும் ஷர்துல் இணைந்து, இந்திய அணியின் ஸ்கோரை, ஆஸ்திரேலியாவுக்கு இணையாக எடுத்துச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷர்துலின் ஆட்டமிழப்பு அந்த எதிர்பார்ப்பிற்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.