மும்பை: இந்தியப் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகளை விற்று வெளியேறுவதில் ஆர்வம் காட்டியதால், ரூ.3.25 லட்சம் கோடியை இழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகப் பங்குச் சந்தை முதலீட்டாளர்களின் மனநிலையை ஒட்டி, இந்தியப் பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் எண்ணியதால், இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,066.33 புள்ளிகள் சரிந்து, 39728.41 புள்ளிகளில் நிலைபெற்றது. இதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 290.70 புள்ளிகள் சரிந்து 11680.35 புள்ளிகளில் நிலைப்பெற்றது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் கொரோனா காரணமாக ஏற்பட்ட தாக்கம், இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தன.
மும்பை சந்தையின் சென்செக்ஸ் பிரிவில், ஏஷியன் பெயின்ட்ஸ் பங்குகள் மட்டும் 0.32% என்ற மிகச்சிறிய அளவில் விலை அதிகரித்தன. மற்ற நிறுவன பங்குகள் அனைத்தும் சரிவையே கண்டன.