லடாக்,
உலக யோகா தினத்தை முன்னிட்டு, லடாக்கில் 18 ஆயிரம் அடி உயரத்தில் மைனஸ் 25 டிகிரி குளிரில் ராணுவ வீரர்கள் யோகா செய்தனர்.
இன்று உலகம் முழுவதும் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் இன்று காலை யோகா செய்து, யோகா தினத்தை சிறப்பித்தனர்.
யோகா தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி உள்பட ஏராளமானோர் யோகா செய்தனர்.
தமிழக கவர்னர், கோவை அருகே உள்ள ஈஷா யோக மையம் சென்று யோகா செய்தார்.
இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு முகாம்களில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களும் யோகா பயிற்சி செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் மலைப்பகுதியில் 18 ஆயிரம் அடி உயரத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்கள் மைனஸ் 25 டிகிரியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் யோகா செய்து, சர்வ யோகா தினத்தை சிறப்பித்தனர்.