சிட்னி: பந்து வீசுவதற்கு இந்திய அணியினர் அதிகநேரம் எடுத்துக்கொண்டதால், முதல் ஒருநாள் போட்டிக்கான அணியின் ஊதியத்தில், 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி முதலில் பந்து வீசியது. அப்போது, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், 1 ஓவர் குறைவாக வீசியிருந்தது. முதல் ஒருநாள் ஆட்டம், மொத்தமாக 8 மணிநேரத்திற்கும் அதிகமாக விளையாடப்பட்டது.

இந்நிலையில், இத்தவறை இந்தியக் கேப்டன் விராத் கோலி ஒப்புக்கொண்டார். இதனால், இதுதொடர்பாக எந்த மேலதிக விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தியா பந்துவீசுவதற்கு அதிகநேரம் எடுத்துக்கொண்டதால், ஆஸ்திரேலியா அணியின் இன்னிங்ஸ், 4 மணிநேரத்திற்கும் கூடுதலாக சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.