டில்லி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு சில இந்திய மாநிலங்கள் தடை விதித்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பல உலக நாடுகள் சீனர்கள் மற்றும் சீனாவில் இருந்து வருவோருக்குத் தடை விதித்தன.   அதன் பிறகு ஐரோப்பிய நாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.   தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவி உள்ளது.

எனவே ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்குச் செல்ல பல நாடுகளில் தடை விதிக்கபட்டுள்ள்து.   குறிப்பாக இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் நாட்டினுள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய மாநிலங்களிலும் இதே தடை விதிக்கபட்டுள்ளது.  குறிப்பாக நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய சுற்றுலா மாநிலங்கள் தங்கள் மாநிலங்களுக்குச் சுற்றுலாப் பயணிகள் வர தடை விதித்துள்ளது.