ஸ்ரீஹரிகோட்டோ:

ந்தியாவின்  தகவல்தொடர்புக்காக உருவாக்கப்பட்ட  ‘ஜிசாட் – 30’ செயற்கைக்கோள் பிரெஞ் கயானா ஏவுதளத்தில் இருந்து இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

3,357 கிலோ எடையுள்ள, ஜிசாட் – 30 செயற்கைக்கோள், தொலைதொடர்பு, வீடு தேடி வரும் தொலைகாட்சி ஒளிபரப்புக்கான ‘டி.டி.எச்., விசாட்’ மற்றும், ‘டிஜிட்டல்’ சேவைகளுக்கு உதவும். இதன், ‘கியூ பேண்டு’ டிரான்ஸ்பாண்டர், இந்தியா மற்றும் சுற்றியுள்ள தீவுகளுக்கும், ‘சி பேண்டு’ டிரான்ஸ்பாண்டர், வளைகுடா நாடுகள், ஏராளமான ஆசிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டின் தொலைதொடர்பு சேவைகளுக்கு துணைபுரியும்.

இந்த ஜிசாட்-30 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள். மேம்பட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ள  செயற்கைக்கோளானது தென் அமெரிக்காவில், பிரெஞ்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ளது, ஏரியன் விண்வெளி தளத்தில்இருந்து இன்று  அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

‘ஜிசாட் – 30’ மற்றும் இடுல்சாட் நிறுவனத்தின், ‘இடுல்சாட் கோனக்ட்’ செயற்கைக் கோள்களுடன், ‘ஏரியன் – 5’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு, நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்து உள்ளது.