டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,85,494 ஆக உயர்ந்து 32,096  பேர் மரணம் அடைந்துள்ளனர்

நேற்று இந்தியாவில் 48,479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 13,85,494 ஆகி உள்ளது.  நேற்று 692 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 32,096 ஆகி உள்ளது.  நேற்று 36,127 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 8,86,235 ஆகி உள்ளது.  தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,66,743 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 9,251 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,66,368 ஆகி உள்ளது  நேற்று 257 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,389 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,227 பேர் குணமடைந்து மொத்தம் 21,07,194  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 6,988 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,06,737 ஆகி உள்ளது  இதில் நேற்று 89 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,409 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 7,758 பேர் குணமடைந்து மொத்தம் 1,51,055 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 1,142 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,29,631 ஆகி உள்ளது  இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,806 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,137 பேர் குணமடைந்து மொத்தம் 1,13,068 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 5,072 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 90,942 ஆகி உள்ளது  இதில் நேற்று 72 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 1,798 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,403 பேர் குணமடைந்து மொத்தம் 33,750 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 7,813 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 88,671 ஆகி உள்ளது  இதில் நேற்று 52 பேர் உயிர் இழந்து மொத்தம் 985 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,320 பேர் குணமடைந்து மொத்தம் 43,255 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.