டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,28,405 ஆக உயர்ந்து 46,188 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

 

நேற்று இந்தியாவில் 61,252 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 232,28,405 ஆகி உள்ளது.  நேற்று 835 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 46,188 ஆகி உள்ளது.  நேற்று 56,481 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 16,38,101 ஆகி உள்ளது.  தற்போது 6,43,643 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 11,088 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 5,35,601 ஆகி உள்ளது  நேற்று 256 பேர் உயிர் இழந்து மொத்தம் 18,306 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 10,014 பேர் குணமடைந்து மொத்தம் 3,68,435  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,834 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 3,08,649 ஆகி உள்ளது  இதில் நேற்று 118 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,159 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,005 பேர் குணமடைந்து மொத்தம் 2,50,680 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 9,024 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,444,549 ஆகி உள்ளது  இதில் நேற்று 87 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,203 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,115 பேர் குணமடைந்து மொத்தம் 1,54,749 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 6,257 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,88,611 ஆகி உள்ளது  இதில் நேற்று 86 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 3,398 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,473 பேர் குணமடைந்து மொத்தம் 1,05,599 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டில்லியில் நேற்று 1,257 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,47,391 ஆகி உள்ளது  இதில் நேற்று 8 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,139 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 727 பேர் குணமடைந்து மொத்தம் 1,32,384 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

patrikaidotcom, tamil news, Corona, India, 2328405 affected, 46188 died, கொரோனா, இந்தியா, 2328405 பேர் பாதிப்பு, 46188 பேர் மரணம்