டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,02,08,725 ஆக உயர்ந்து 1,47,940 பேர் மரணம் அடைந்து 97,81,945 பேர் குணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 20,333 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,02,08,725 ஆகி உள்ளது.  நேற்று 281 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,47,940 ஆகி உள்ளது.  நேற்று 21,097 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 97,81,945 ஆகி உள்ளது.  தற்போது 2,76,028 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 3,314 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,19,550 ஆகி உள்ளது  நேற்று 66 பேர் உயிர் இழந்து மொத்தம் 49,255 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,124 பேர் குணமடைந்து மொத்தம் 18,09,948 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 59,214 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 911 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 9,16,256 ஆகி உள்ளது  இதில் நேற்று 11 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,062 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,214 பேர் குணமடைந்து மொத்தம் 8,91,095 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 13,080 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 349 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,81,061 ஆகி உள்ளது  இதில் நேற்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 7,094 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 422 பேர் குணமடைந்து மொத்தம் 8,70,342 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 3,625 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,009 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,14,170 ஆகி உள்ளது  இதில் நேற்று 10 பேர் உயிர் இழந்து மொத்தம் 12,069 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,091 பேர் குணமடைந்து மொத்தம் 7,93,154 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 8,947 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 4,905 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,40,517 ஆகி உள்ளது  இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 2,977 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,463 பேர் குணமடைந்து மொத்தம் 6,72,196 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 65,165 பேர் சிகிச்சையில் உள்ளனர்.