ராஜ்கோட் ஸ்டேடியம்

மும்பை

ந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட் அல்லது ஐதராபாத்தில் நடைபெறலாம் என தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை ஐந்து நாள் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் பகல் பொழுதுகளில் மட்டுமே நடைபெற்று வந்துள்ளன.    தற்போது முதல் முறையாக டெஸ்ட் போட்டிகள் பகல் இரவு போட்டிகளாக நடைபெற உள்ளன.   அவ்வாறு நடக்கும் போட்டி மேற்கிந்திய தீவுகளுடன் இந்த வருடம்  நடைபெற  உள்ளன.

ஐதராபாத் ஸ்டேடியம்

இந்த போட்டியில் விளையாட உள்ளவர்களை தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்ந்து எடுத்துள்ளது.    மேலும் இந்த தொடரின் முதல் போட்டி ராஜ்கோட் அல்லது ஐதராபாத் நகரில் நடைபெறும் என தெரிவித்துள்ளது.  இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளது.   அனேகமாக அக்டோபர் மாதம் தீபாவளிக்குப் பிறகு இந்தப் போட்டிகள் தொடங்கலாம் என கூறப்படுகிறது.