காத்மண்டு: நேபாளத்தில் நடந்துவரும் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில், டிரையாத்லான் போட்டியில் இந்திய வீரர் ஆதர்ஷா சினிமோல் தங்கம் வென்று, இந்தியாவின் தங்க வேட்டையைத் துவக்கி வைத்துள்ளார்.

நேபாளத்தில் நடந்துவரும் 13வது தெற்காசியப் போட்டியின் ஒரு பகுதியாக, பொகாரோ நகரில் டிரையாத்லான் போட்டிகள் நடைபெற்றன. இதில், 750 மீ நீச்சல், 5 கி.மீ. ஓட்டம் மற்றும் 20 கி.மீ. சைக்கிள் பந்தயம் என மொத்தம் மூன்று வகையான போட்டிகள் நடத்தப்படும்.

இதில், பந்தய இலக்கை முதலில் எட்டுபவரே வெற்றியளார்! ஆண்கள் பிரிவு டிரையாத்லான் போட்டியில் இந்தியாவின் ஆதர்ஷா சினிமோல், வெற்றி இலக்கை 1 மணிநேரம் 2 நிமிடம் மற்றும் 51 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

மற்றொரு இந்தியரான பிஷ்வர்ஜித் ஸ்ரீகோம் இதேப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பெண்கள் பிரிவு டிரையாத்லான் போட்டியில், தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் சரோஜினி தேவி, வெள்ளிப் பதக்கமே வென்றார்.