டில்லி:

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி இந்திய தேசத்தின் தாய் என்று அவரது பேரனும், பாஜக எம்பி.யுமான வருண் காந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வருண்காந்தி தனது டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தைரியம் தான் ஒவ்வொரு நல்லொழுக்கத்திற்கும் முக்கியமானது. தைரியம் இன்றி எந்த நல்லொழுக்கத்தையும் நாம் தொடர முடியாது. இந்த தேசத்தின் தாயான உங்களை பிரிந்து வாடுகிறேன். நீங்கள் எப்போதும் எங்களை கண்காணித்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, மறைந்த பிரதமரான இந்திரா காந்தி தன்னை சிறுவயதில் தூக்கி வைத்திருக்கும் ஒரு புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்திரா காந்தியின் 100வது பிறந்த நாளில் அவரது கு டும்பத்தினரான காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, இவரது மகன் ராகுல்காந்தி ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.

உ.பி.மாநிலம் அலகாபாத்தில் 1917ம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி பிறந்த இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திராகாந்தியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிம் மரியாதை செலுத்தினார்.