ஜகார்தா:

இந்தோனேசியாவில் ஓடும் ரயிலில் பாம்பு புகுந்ததால் பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இந்தோனேசியாவில் பயணிகள் ரயில் ஒன்றின் பெட்டியில் பொருட்கள் வைக்கும் இடத்தில் பாம்பு ஒன்று நெளிந்து கொண்டிருந்ததை கண்டு பயணிகளை அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக அந்த ரயில் அவசரமாக நிறுத்தப்பட்டது.

காவலர்கள் உதவிக்கு வந்த நிலையில் ரயிலில் பயணம் செய்த வாலிபர் சிறிதும் அச்சமின்றி தனது கைகளால் பாம்பின் வாலைப் பிடித்து இழுத்தார். பின்னர் பாம்பு வந்தவுடன் அதனை அப்படியே தரையில் ஓங்கி அடித்து கொன்றார். இச்சம்பவத்தை சக பயணிகள் செல்போனில் பதிவு செய்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர்.

இந்த படம், வீடியோ வைரலாகி வருகிறது. எனினும் ரெயிலில் பாம்பு புகுந்த தகவல் அறித்து உலகம் முழுவதும் ரெயில் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.