இந்தோனேஷியாவில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 21 பேர் பலி
ஜகர்த்தா:
இந்தோனேசியாவில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியா ஜாவா தீவில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
தெற்கு ஜாவா தீவில் உள்ள ஒரு தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேருந்துகளில் சுகாபூமி மாவட்டத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இதில் ஒரு பேருந்து அதிக வளைவுகள் கொண்ட மலைச் சாலையில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் படுகாயமடைந்த 9 பேர் மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.