ஜகார்தா: இந்தோனேசியாவின் ஜகார்தா விமான நிலையத்தில் இருந்து 62 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் அடுத்த 4 நிமிடத்தில், தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமான நிலையில், அந்த விமானத்தில் பாகங்கள் கடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

இதனால், விமானம் ஜாவா கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்த பணிகளின் நிலை என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 56 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 62 பேருடன் புறப்பட்ட ஸ்ரீவிஜியா எஸ்.ஜே .182 (Sriwijaya  SJ182)  மாடல் விமானம், அடுத்த 4 நிமிடத்தில் சுமார் 10ஆயிரம் அடி உயரத்துக்கு பறந்தது. அதைத்தொடர்ந்து, அந்த விமானம் தொடர்பை இழந்து  திடீரென மாயமானது.

விமானம் ஜாவா கடலுக்கு மேலே,  தீவு நகரான போண்டியானா பகுதியில்  வ  பறக்கும் போது ரேடாருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, விமானத்தை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டனர்.  விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.

இந்த நிலையில், ஜாவா கடலில் விமானத்தின் சிதைந்த பாகங்களை உள்ளூர் மீனவர்கள் கண்டெடுத்துள்ளனர். இதனால், இந்தோனேசிய விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.