கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது இன்று நேற்று நாளை திரைப்படம்.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் முதல் பாகத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த ஆர்யா இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிக்கிறார் விஷ்ணு விஷால் இந்த பாகத்திலும் கதாநயகனாக நடிக்க உள்ளார்.

முதல் பாகத்தில் நடித்த அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்திலேயே நடிக்க உள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் ரவிகுமாரின் உதவியாளர் கார்த்திக் இயக்கவுள்ளார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் 25 ஆவது படமாக உள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

கொரோனா காரணமாக தள்ளிப்போன இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது. அது சம்மந்தமானப் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் நடிகர் கருணாகரனும் பூஜையில் கலந்து கொண்டார்.