“சட்டத்தின் அடிப்படையிலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது” என்று தமிழக : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் கோவையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொண்டதாக சர்ச்சை கிளம்பியது.

இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு ஆளுநர் மூலமாக தலையிடுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் தான் ஆய்வு செய்தது குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்ததாவது: “நேரடி ஆய்வை பலர் பாராட்டியுள்ளனர்,

இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை. அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே செயல்பட்டிருக்கிறேன். இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் கிடையாது. வளர்ச்சிப் பணியில் மாநில அரசுக்கு ஒத்துழைக்கவே ஆய்வு செய்தோன்.

கட்டாயப்படுத்தியோ, வற்புறுத்தியோ எந்த கூட்டத்திற்கும் அதிகாரிகளை அழைக்கவில்லை. சட்ட நடைமுறைகளுக்கு மாறாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. சிறப்பான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அறிவுரை வழங்கவே அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினேன்.

அசாமில் ஆளுநராக இருந்தபோதும் இதேபோல் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளேன்.- இதை அங்குள்ள மக்கள் பாராட்டியிருக்கிறார்கள். தமிழகத்தில் இதுபோன்ற ஆய்வுகள் தொடரும் “ என்று ஆளுநர் புரோகித் தெரிவித்தார்.