சென்னையில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக பாஜ செயற்குழு உறுப்பினரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் புகழேந்தி இதுவரை பத்துக்கும் மேற்பட்ட சிறுமிகளை, பாலியல் தொழிலில் தள்ளியது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் புகழேந்தியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சபீனா என்பவர் சென்னை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், தனது 13 வயது மகள் தொடர்பாக புகார் அளித்தார். அவரது புகார்ல மனுவில், மதன்குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா, மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து எனது 13 வயதான மகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருவதாகவும், அவர்கள்மீது நடவடிக்கை எடுத்து, தனது மகளை காப்பாற்ற வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி, வ விசாரணை நடத்தி 8 பேரை கைது செய்தார். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு ஈடுபட வைத்ததும், இதில், மகேஷ்வரி (எ) மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகிய 4 பேர் புரோக்கர்களாக செயல்பட்டு, வாடிக்கையாளர்களை அறிமுகம் செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, புரோக்கர்களான மதன்குமார், ஷாகிதா பானு, சந்தியா, மகேஷ்வரி, வனிதா, விஜயா ஆகியோர் கைது செய்யப்பட்டு, நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இவர்களுக்கு உடந்தையாக முத்துப்பாண்டி, அன்சாரி பாஷா, அனிதா, மீனா, கார்த்திக், முஸ்தபா ஆகியோரும் புரோக்கர்களாக செயல்பட்டது தெரியவந்தது அவரையும் மொத்தமாக அள்ளிய காவல்துறை மேலும் விசாரணையை தீவிரப்படுத்த, வடசென்னை வடக்கு மாவட்ட பாஜவின் செயற்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான ராஜேந்திரன் (வயது 44) என்பவர், தனது தொழில்முறை காரியத்திற்காக, பலமுறை இந்த 13 வயது சிறுமி மற்றும் பல இளம்பெண்களை போலீஸ் அதிகாரிகளுக்கு தாரை வார்த்துள்ளது அதிர்ச்சி தகவல வெளியானது.
இதையடுத்து, பாஜவை சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திரனை போலீசார் கைது செய்த போலீசாரிடம் அவரிடம் நடத்திய விசாரணை நடத்தியதில், எண்ணூர் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக உள்ள சி.புகழேந்தி என்பவருக்காக பலமுறை சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தியதாக கூறினார். இதனால் இன்ஸ்பெக்டர் புகழேந்தியும் கைது செய்யப்பட்டார். அவர்களை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, இன்ஸ்பெக்டர் புகழேந்தியை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து காவல் ஆணையர் அகர்வால் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் புகழேந்தி ஏராளமான புகார்கள் உள்ளதாகவும், புகார் கொடுக்க பெண்கள் வந்தால் அவர்களது நம்பரை வாங்கி போன் செய்து தொல்லை கொடுப்பாராம். பெண்கள் விஷயத்தில் கடும் வீக்காக இருப்பவர். வாரத்திற்கு ஒரு பெண் இல்லாமல் இருக்க மாட்டாராம். குறிப்பாக, சிறுமிகளுக்கு அதிக அளவில் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.