மூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு பல்வேறு நெறிமுறைகளை அறிவித்து உள்ளது. அதை மீறினால் முடக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள வாட்ஸ்அப் செயலியில் பயனர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலோர் தற்போது இன்ஸ் டாகிராம் சமூக வலைதள செயலியை நாடி வருகின்றனர். அதன் காரணமாக அதன் பயனர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சமுதாய வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் கணக்குகள் முடக்கப்படும்  என்ற எச்சரிக்கையை இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு அனுப்பி வருகிறது.

நெறிமுறைகளை மீறும் உள்ளடக்கம் பற்றிய கொள்கைகளை  மாற்றியமைத்துள்ளதாக தெரி வித்து உள்ளதாகவும்,  மீண்டும் மீண்டும் கொள்கைகளை மீறும் கணக்குகளை உடனுக்குடன் கண்டுபிடித்து நீக்குவதற்கு புதிய விதிகள் உதவிகரமாக இருக்கும் என்று  தெரிவித்து உள்ளது.

மேலும், தொல்லை தரும் பதிவுகளை கண்டறிந்து அவற்றை பதிவேற்றம் செய்யும் முன்பு எச்சரிக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு செயல்பாட்டினை இம்மாத தொடக்கத்தில் இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்திருப்பதாகவும்,  குறிப்பிட்ட காலத்திற்குள் நிகழ்ந்த நெறிமுறை மீறல்களின் எண்ணிக்கையை பொறுத்து பயனர் கணக்கினை செயல்முடக்கம் செய்வதற்குப் புதிய விதி வழிசெய்கிறது. தற்போது, விதிமுறைகளை மீறும் உள்ளடக்கத்தின் அளவினை பொறுத்து கணக்குகள் செயல்முடக்கம் செய்யப்பட்டு வருகின்றன என்றும் கூறி உள்ளது.

விதிமுறைகளை மீறி பதிவிடப்படும், பதிவுகள், பின்னூட்டங்கள் தொடர்பாக, பயனர்களின் கணக்கு செயல்முடக்க வாய்ப்பு  உள்ளதாகவும் சமுதாய நெறிமுறைகளை மீறி,  நிர்வாணம், ஆபாசம், துன்புறுத்தல், தொல்லை தருதல், வெறுப்புணர்வு, போதை மருந்து விற்பனை, தீவிர வாதம் குறித்த படங்கள் மற்றும் பதிவுகளை பயனர்கள் நீக்குவதற்கும் இன்ஸ்டாகிராம் வாய்ப்பு தருகிறது. அதை மீறி செயல்படும் பயனர்களின் பதிவுகள் நீக்கப்படும் என்றும், அவர்கள் கணக்கு முடக்கப்படும் என்றும் எச்சரித்து உள்ளது.

அத்துடன்  இன்ஸ்டாகிராமில் செய்யும் பதிவுகளுக்கு பயனர்கள்தான்  பொறுப்பேற்க வேண்டும் என்றும் புதிய விதி வழி செய்கிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.